திருக்கருக்காவூர் -மாதவி வனேச்சுரர்http://balukathaiyan.blogspot.com/
தலவிருட்சம்:முல்லை | தலமும்இருப்பிடமும்: கும்பகோணம் தஞ்சை பேருந்துவழியில் சுந்தரப் பெருமாள் கோவிலுக்குத் தென்திசையில் 3 கி.மீ தொலைவிலுள்ளது. அருகில் பாபநாசம் உள்ளது. அப்பர் சுவாமிகளின் தேவாரம் பெற்ற தலம். தாருகாவன் முனிவர்கள் ஏவிய புலியை உரித்து இறைவன் தரிசித்து அருளிய தலம். |
தலப்பெயர்கள்:
இவ்வூர், நித்தவிநோத வளநாட்டு நல்லூர் நாட்டைச் சேர்ந்த ஊர் என்றெழுதப்பட்டுள்ளது. சுவாமி திருப்பாலத்துறை மகாதேவர் என்று குறிப்பிட்டுள்ளார்.
இவ்வூர், நித்தவிநோத வளநாட்டு நல்லூர் நாட்டைச் சேர்ந்த ஊர் என்றெழுதப்பட்டுள்ளது. சுவாமி திருப்பாலத்துறை மகாதேவர் என்று குறிப்பிட்டுள்ளார்.
மூர்த்திகள்:
| இறைவன் | : | மாதவி வனேச்சுரர், முல்லை வனநாதர்,கர்ப்ப புரீச்சரர், கருகாவூர்க் கற்பகம் (இது பஞ்சாரண்ய ஷேத்திரத்தில் முதல் ஷேத்திரம்,உஷாக்காலம்) |
| இறைவி | : | ஸ்ரீ கர்ப்பரட்சாம்பிகை, கர்ப்ப ரட்ச்கி, கருகாத்த நாயகி, கரும்பனையாள் |
தீர்த்தங்கள் :ஷீரகுண்டம்(பாற்குளம்), சத்திய கூபம், பிரம்ம தீர்த்தம், விருத்த காவிரி.
திருமுறை: ஸ்ரீ சம்பந்தர்,ஸ்ரீ அப்பர்
தலப்பெருமை:திருமுறை: ஸ்ரீ சம்பந்தர்,ஸ்ரீ அப்பர்
இங்குள்ள இறைவி ஊர்த்துவ பாதர் என்ற முனிவர் விட்ட சாபத்தை தணித்து நித்ருவரின் மனைவி வேதிகையின் கலைந்த கருவை திரும்ப உருவாக்கி நைதுருவன் என்ற குழந்தையை கொடுத்தால் கர்ப்ப ராட்சாம்பிகையாகவே எழுந்தருளி,உலகில் கருத்தரித்தவர்களையும் கருவையும் காப்பாற்ற வேண்டுமென்று பிரார்த்திக்க, அம்பாள் காமதேனுவை அனுப்பி பால்கொடுக்கச் செய்தாள். காமதேனு தன் கால் குளம்கினால் கீறவும் பால்குளம் தோன்றியது.அது ஆலயத்திற்கு முன்புறம் ஷீரகுண்டம் என்று இருந்து வருகிறது.எனவேதான் இத்தலத்து நாயகியை நினைத்து வணங்கினால் கரு உண்டாகிறது.கரு நிலைக்கிறது. சுகப்பிரசவம் ஏற்படுகிறது.

தேவார பாடல்:
ஆருர் அத்தா ஜயாற்று
அமுதே.அளப்பூர் அம்மானே
காரூர் பொழில்கள் புடைசூழ்
புறவிற் கருகாவூ ரானே
பேரூர் உறையாய்ப் பட்டிப்
பெருமான் பிறவா நெறியானே
பாரூர் பலரும் பரவப்
படுவாய் பாசூர் அம்மானே
-சுந்தரர்
மனவஞ்சர் மற்றோட முன்மாதராரும்
மதிகூர் திருக்கூடலில் ஆலவாயும்
இனவஞ் சொலி இடைமா-மருதும்
இரும்பைப் பதிமாகாள வெற்றிய்யூரு
கனமஞ் சினமால் விடையான் விரும்புங்
கருகாவூர் நல்லூர் பெரும் புலியூர்
தனமென் சொல்லிற்றஞ்ச மென்றே நினைமின்
தவமாம் மலமாயின் தான்றுமே
-திருஞானசம்பந்தர்
தலச்சிறப்பு:
பல ஆண்டுகளாக குழந்தைப்பேறு இல்லாதவர்கள் குழந்தைபாக்கியம் பெறவும். திருமணம் கூடிவராத பெண்களுக்கு விரைவில் திருமணம் கூடி வரவும் அன்னை கருகாத்த நாயகியை வேண்டி நெய்யினால் படி மெழுகி அம்மன் பாதத்தில் வைத்து மந்திரிக்கப்பட்ட நெய்யினை 48 நாட்கள் உண்டுவந்தால் குழந்தைப்பேறு கிட்டும் என்பது கண்கூடு. மேலும் கருவுற்ற பெண்கள் இத்தல்த்து இறைவன் கருகாத்த நாயகியை வேண்டி விளக்கெண்ணெய் மந்திரித்து வயிற்றில் தடவினால் கரு காக்கப்படுகிறது. சுகப்பிரசவம் ஆவதும் உண்மை நிகழ்வுகள்.

Ara Time
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக